Friday, July 31, 2026

Jul 31

 மனதில் பதிக்க

ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும். -  திருப்பாடல்கள் - 69: 14

Lord, in your great love, answer me. - Psalm 69:14

                                                                                  

 மனதில் சிந்திக்க


கடவுள் நம் பலவீனங்களை அறிந்திருந்தும், அவருடைய இரக்கத்தை நம்புமாறு நம்மை அழைக்கிறார். திருப்பாடல் ஆசிரியரைப் போலவே, உண்மையுடன் நிலைத்திருப்பதால் நாமும் நிராகரிக்கப்பட்டதாகவோ, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவோ அல்லது மனச்சோர்வடைந்ததாகவோ உணரக்கூடும். கிறிஸ்து நம் துன்பங்களில் பங்கெடுத்து, நம்மை நம்பிக்கையற்ற நிலையிலிருந்து மீட்டெடுக்கிறார். நிராகரிப்பை எதிர்கொள்ளும்போதும், நாம் அவரை ஆழமாக நம்பி உண்மையுடன் நிலைத்திருக்க முடியுமா?


God knows our weaknesses and still invites us to trust in His mercy. Like the psalmist, we may feel rejected, misunderstood, or overwhelmed for remaining faithful. Christ shares our suffering and lifts us from despair. Can we trust Him more deeply and remain faithful, even when we face rejection?


-- Seventeenth Friday in ordinary time - Cycle 2


Thursday, July 30, 2026

Jul 30

 மனதில் பதிக்க

நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். - மத்தேயு 13: 48


When it was full, they drew it ashore, sat down, and put the good into baskets but threw out the bad. - Matthew 13:48

                                                                                  

 மனதில் சிந்திக்க


இயேசுவின் வலை அனைவரையும் அரவணைத்து, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. அவருடைய அருள் இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால்அதனை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் வாழ வேண்டியது நம் பொறுப்பு. அவருடைய அன்பு நம் இதயங்களை மாற்றியமைக்கும்போது, நாம் புனிதத்தில் வளர்ந்து, பிறருக்கு இறையன்பின் கருவிகளாக மாறுகிறோம். இன்று நம் இதயத்தை இறைவனின் அருளுக்கு எவ்வாறு திறக்கிறோம்?

Jesus' net embraces everyone, revealing God's boundless mercy and love. His grace is freely offered, but we must choose to accept it and live faithfully. As His love transforms our hearts, we grow in holiness and become instruments of His love.

How are we opening our heart to God's grace today?


-- Seventeenth Thursday in Ordinary Time - Cycle 2


Wednesday, July 29, 2026

Jul 29

 மனதில் பதிக்க

எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய். எரேமியா -15: 18,19

Why is my pain continuous? Why is my pain unending? If you return, you shall stand before Me. Jeremiah – 15:18,19

                                                                                  

 மனதில் சிந்திக்க

கடவுளிடம் காட்டும் உண்மையுள்ள பற்றுறுதி பெரும்பாலும் தவறான புரிதல்களையும் புறக்கணிப்பையும் கொண்டுவரும் என்பதை எரேமியா நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்தவ வீரத்துவம் என்பது உணர்ச்சிகளே இல்லாமல் இருப்பது அல்ல; மாறாக, அனைத்தையும் அர்ப்பணிப்பதே ஆகும். அவமதிப்புகள் மனதை வருத்தும்போது ஆச்சரியப்படாதீர்கள்; அவற்றை கடவுளிடம் கையளியுங்கள். ஒரு விரைவான செயல்முறையைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்: ஒரு சிறிய ஜெபம், மீண்டும் பணியைத் தொடர்தல் மற்றும் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதே ஆகும்.

Jeremiah reminds us that faithfulness to God often brings misunderstanding and rejection. Christian heroism is not feeling nothing; it is offering everything. When insults hurt, do not be surprised—offer them to God. Practice the quick eviction: a short prayer, a return to the task, and the awareness of God's presence.

-- Seventeenth Wednesday in Ordinary Time - Cycle 2




Tuesday, July 28, 2026

Jul 28

 மனதில் பதிக்க

ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.- திருப்பாடல்கள்-79:9


For the glory of your name, O Lord, deliver us. - Psalm 79:9

                                                                                  

 மனதில் சிந்திக்க

நமக்கு ஒவ்வொரு நாளும் இறைவனின் இரக்கம் தேவை என்பதை திருப்பாடல்கள் நினைவூட்டுகிறது. நமது சொந்த முயற்சிகளால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது. புனித தெரேசாளைப் போல, எளிமையான குழந்தை மன நம்பிக்கையுடன் இறைவனை முழுமையாக நம்பி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க நாம் அழைக்கப்படுகிறோம்.ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தவும் உதவவும் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருக்கிறோமா?


Psalm reminds us that we need God's mercy every day. We cannot save ourselves by our own efforts. Like St. Thérèse, we are called to trust God with simple, childlike faith and bring everything to Him. Do we trust God to guide and help us each day?


-- Seventeenth Tuesday in Ordinary Time - Cycle 2



Monday, July 27, 2026

Jul 27

 மனதில் பதிக்க

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். - மத்தேயு - 13: 33

The mustard seed becomes a large bush and the birds of the sky come and dwell in its branches. - Matthew - 13:33


                                                                                  

 மனதில் சிந்திக்க

இயேசு, இறையாட்சியை மாவை உள்ளிருந்து அமைதியாக புளிக்கச் செய்யும் புளிப்புமாவிற்கு ஒப்பிடுகிறார். நாமும் நம் விசுவாசம், அன்பு, மகிழ்ச்சியான சாட்சிய வாழ்வு மூலம் எங்கு இருந்தாலும் கிறிஸ்துவை எடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம். நமது சாதாரண வாழ்க்கையையும் இறைவன் தமது அருளால் பிறரைத் தொடும் கருவியாகப் பயன்படுத்த முடியும். இறைவன் நம்மை வைத்திருக்கும் இடத்தில், அவருடைய இறையாட்சி வளர நாம் எவ்வாறு பங்களித்து வருகிறோம்?

Jesus compares the Kingdom of God to yeast that quietly transforms the world from within. We are called to bring Christ wherever we are through faithful living, love, and joyful witness. God can use our ordinary lives to touch others with His grace. How are we helping God's Kingdom grow where He has placed us?


-- Seventeenth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, July 26, 2026

Jul 26

 மனதில் பதிக்க

நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். - 1 அரசர்கள் 3:11


You have asked only for the wisdom needed to administer justice. - 1 Kings 3:11

                                                                                  

 மனதில் சிந்திக்க


சாலொமோனைப் போல, இறையாட்சியை முதன்மையாகத் தேடும்போது, இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் நம் வாழ்வில் பெருகும். நமக்குத் தேவைப்படும் ஞானம் பரிசுத்த ஆவியின் கொடையாகும்; இது செபம், திருவிவிலியம் மற்றும் திருவருட்சாதனங்கள் வழியாக வளர்க்கப்படுகிறது. நம்முடைய சொந்த விருப்பங்களை விட இறைவனின் ஞானத்தைத் தேடி, நம் அன்றாட முடிவுகளை வழிநடத்தத் திருநற்கருணையில் உள்ள கிறிஸ்துவை அனுமதிக்கிறோமா?


Seeking God's kingdom first, like Solomon, opens our hearts to His blessings and grace. The wisdom we need is a gift of the Holy Spirit, nurtured through prayer, Scripture, and the sacraments. Are we seeking God's wisdom above our own desires and allowing Christ in the Holy Eucharist to guide our decisions each day?


-- Seventeenth Sunday in Ordinary time - Year A


Saturday, July 25, 2026

Jul 25

 மனதில் பதிக்க

நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? - மத்தேயு 20:22


Can you drink the chalice that I am going to drink? -Matthew 20:22

                                                                                  

 மனதில் சிந்திக்க


When Jesus asks if we can drink the chalice of suffering that He endured for our salvation, can we truly imitate Him by offering our own small sacrifices and uniting our pain with His for the redemption of souls?


நமது மீட்பிற்காக இயேசு அருந்திய துன்பக் கிண்ணத்திலிருந்து நம்மால் பருக முடியுமா என்று அவர் கேட்கும்போது, நமது அன்றாடச் சிறு தியாகங்களை அர்ப்பணித்து, ஆன்மாக்களின் மீட்பிற்காக நமது துயரங்களை அவருடைய பாடுகளோடு இணைப்பதன் மூலம், நாம் உண்மையிலேயே அவரைப் பின்பற்ற இயலுமா?


-- Sixteenth Saturday in Ordinary time - Cycle 2


Friday, July 24, 2026

Jul 24

 மனதில் பதிக்க

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். -  லூக்கா 8:15


Blessed are they who have kept the word with a generous heart and yield a harvest through perseverance. - Luke 8:15

                                                                                  

 மனதில் சிந்திக்க


When our roots run deep in Christ, our faith stands unshaken by the storms of life. We rest in the assurance that God is sovereign. Hardships are guaranteed in this world, but since Jesus has already won the battle, Can we remain in Him through our trials?


இயேசுவில் ஆழமாய் வேரூன்றி, வாழ்வின் புயல்களிலும் அசையாமல் நிற்போம். அவர் மேல் நம்பிக்கை வைத்து அமைதி கொள்வோம். உலகினில் கஷ்டங்கள் நிச்சயம், ஆனால் இயேசு ஏற்கனவே ஜெயித்துவிட்டார்! எனவே, சோதனைகளின் மத்தியிலும் நாம் அவரோடு நிலைத்திருப்போமா?


-- Sixteenth Friday in Ordinary Time - Cycle 2


Thursday, July 23, 2026

Jul 23

 மனதில் பதிக்க

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில், அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. -  மத்தேயு 13:16-17


But blessed are your eyes, because they see,and your ears, because they hear. - Matthew 13 :16-17

                                                                                  

மனதில் சிந்திக்க


நற்கருணையிலும் நற்செய்தியிலும் இயேசுவைக் கண்டடையும்போது, நம் விசுவாசம் இன்னும் ஆழமடைகிறது. இந்த ஆழமான நெருக்கம், பலிபீடத்திலிருந்து பெறும் அமைதியை நாம் உலகிற்கு எடுத்துச்செல்ல வழிவகுக்கிறது; இதனால், மற்றவர்கள் நம் வாழ்வின் மூலமாகவே கிறிஸ்துவைக் காணவும் கேட்கவும் முடிகிறது. வாழ்வளிக்கும் அப்பத்தை உட்கொண்ட நாம், இனி பிறருக்கு ஓர் ஆசீர்வாதமாய் மாறுவோமா?


Encountering Jesus in the Eucharist and the Gospel profoundly deepens our faith. This intimate closeness inspires us to bring the peace of the altar into the world, allowing others to see and hear Christ through our lives. Having received the Bread of Life, shall we become a blessing to others?


-- Sixteenth Thursday in Ordinary Time - Cycle 2


Wednesday, July 22, 2026

Jul 22

 மனதில் பதிக்க

எனவே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப்படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ - 2 கொரிந்தியர் 5:17


whoever is in Christ is a new creation: the old things have passed away; behold, new things have come. -  2 Corinthians 5:17


                                                                                  

மனதில் சிந்திக்க


கிறிஸ்துவுக்குள் நாம் முற்றிலும் மன்னிக்கப்பட்டு, புதியவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இந்த உலகத்தின் பலவீனங்களையும் சோதனைகளையும் நாம் இன்னும் எதிர்கொண்டாலும், அவருடைய கிருபை நம் ஆத்துமாக்களைக் குணமாக்கி, இறுதி மீட்பின் வாக்குத்தத்தத்தை நமக்கு அளிக்கிறது. இதை அறிந்த நாம், கிறிஸ்துவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டும் கருதாமல், அவரை நம் வாழ்வின் மையமாக வைப்போமா?


In Christ, we are completely forgiven and made new. While we still navigate human infirmities and the trials of this world, His grace heals our souls and promises final restoration. Knowing this, shall we treat Christ not just a piece of our lives but place Him at the absolute center?


-- Sixteenth Wednesday in ordinary time - Cycle 2



Tuesday, July 21, 2026

Jul 21

 மனதில் பதிக்க


விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். -  மத்தேயு 12:50


For whoever does the will of my heavenly Father is my brother, and sister, and mother. -  Matthew 12:50


                                                                                  

மனதில் சிந்திக்க


நாம் கடவுளுடைய சித்தத்தின்படி நடக்கும்போது, இயேசு நம்மைத் தன் குடும்பமாக ஏற்றுக்கொண்டு, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று உறுதியளிக்கிறார். அவர் வாழ்ந்து காட்டிய அந்த வழியில், அவருடைய காலடிகளைப் பின்பற்ற நாம் உண்மையிலேயே தயாராக இருக்கிறோமா?


Jesus welcomes us into His family and assures us that we belong to Him when we do God's will. He modeled this perfectly, so the question remains: are we truly ready to follow in His footsteps?


-- Sixteenth Tuesday in ordinary time - Cycle 2


Monday, July 20, 2026

Jul 20

 மனதில் பதிக்க

நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? - மீக்கா 6:8


And what the LORD requires of you: Only to do the right and to love goodness, and to walk humbly with your God. - Micah 6:8


                                                                   மனதில் சிந்திக்க


நாம் பல வாக்குறுதிகளை அளித்துக் கடவுளிடம் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம். ஆனால் அவரோ மிகவும் எளிமையானவர். இயல்பாகவே நன்மையான அவர், நாமும் சாந்தம், தாழ்ச்சி, இரக்கத்தோடு வாழவே விரும்புகிறார். கடவுளின் இந்த ஒரேயொரு கோரிக்கையை நாம் நிறைவேற்றுவோமா?


While we frequently seek divine favor by offering promises in return, God’s true desire is far simpler. Because He is inherently good, He asks only that we emulate His character by being meek, humble, and merciful. Shall we commit  to fulfilling this singular request that God has made of us?


-- Sixteenth Monday in Ordinary time - Cycle 2


Sunday, July 19, 2026

Jul 19

 மனதில் பதிக்க


அப்படியே தூய ஆவியாரும் நமது பலவீனத்தில் நமக்குத் துணைசெய்கிறார், - உரோமையர் 8:26


The Spirit comes to the aid of our weakness. -   Romans 8:26


                                                        மனதில் சிந்திக்க


பலவீனமான மனிதர்களாகிய நாம், நம் உண்மையான பலத்தை கடவுளிடம் காண்கிறோம். திருமுழுக்கின் வழியாக, பரிசுத்த ஆவியானவரை வாழ்நாள் துணையாக அவர் நமக்குத் தந்துள்ளார். நம் பலவீனமான தருணங்களில், இந்த அசைக்க முடியாத வல்லமையை நாம் சார்ந்து கொண்டு, அவரது மாறாத உதவியை உணர்வோமா?


As fragile, mortal beings, we find our true strength in God. Through baptism, He gives us the Holy Spirit to be our lifelong advocate. Shall we actively lean into this unshakeable power and recognize His constant aid in our moments of our weakness?


-- Sixteenth Sunday in Ordinary Time - Year A


Saturday, July 18, 2026

Jul 18

 மனதில் பதிக்க

கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.- 2 கொரி 5:19


God was reconciling the world to himself in Christ Jesus. - 2 Cor 5:19


                                                           மனதில் சிந்திக்க


தந்தையாம் கடவுள் உலகை உருவாக்கியதன் நோக்கம் உலக மக்கள் தம்மை தெரிந்து கொண்டு வணங்க வேண்டுமென்பதே. ஆனால் உலக மக்கள் ஒரே கடவுளையே  வெறுத்து பாவத்திற்க்கு அடிமையானதால்,  மக்கள் பாவ அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட தம் ஒரே மகனாம் கிறிஸ்துவையே உலகிற்கு அனுப்பி அவருடைய பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம், பாவம் போக்கும் பலி செலுத்தப்பட்டு கிறிஸ்து வழியாக தந்தையுடன் நம்மை ஒப்புரவாக்கினார். 


God the Father created the world so that people come to know the only God and honor Him. But the people in the world ignored the Living God, and became so sinful, so that to save the world, He decided to send His only son Jesus Christ to cleanse the world by shedding His Holy blood, to reconcile the world to Himself through Jesus Christ.


-- Fifteenth Saturday in Ordinary Time - Cycle 2


Friday, July 17, 2026

Jul 17

 மனதில் பதிக்க

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. - யோவான் 10:27


My sheep hear my voice, says the Lord; I know them, and they follow me. - John 10:27


                                                                                   

மனதில் சிந்திக்க


நம் இயேசு ஆண்டவர் நமக்கு நல்ல ஆயன். பொதுவாகவே ஆயனின் குரல் ஆடுகளுக்கு தெரியும் என்பதால்  அவன் குரலையே பின்பற்றி ஆடுகள் நடக்கின்றன. அதுபோல் நாமும் ஆயராகிய நம் கடவுளின் குரலை கேட்டு நல் வழியில் நடக்க பழகிக் கொள்ள வேண்டும். நம் இயேசு ஆண்டவர் ஆடுகளாகிய நாம்  நிலை வாழ்வை பெறும் பொருட்டு நம்மில் குடி கொண்டுள்ளதால் அவரின் குரலை கேட்டு நல்வழியில் நடக்க  பழகிக் கொள்வோமா? 

 

Our Lord Jesus Christ is our Good Shepherd. Usually, the Sheep know their Shepherd's voice and they follow him. In the same way we too should hear Jesus the Good Shepherd's voice and follow Him. In order for us to have abundant eternal life He abides in us to guide us in the right path. Shall we follow Him always?


-- Fifteenth Friday in Ordinary Time - Cycle 2



Thursday, July 16, 2026

Jul 16

 மனதில் பதிக்க

 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். - மத்தேயு 11:29


  For I am meek and humble of heart; - Matthew 11:29

                                                                                   

மனதில் சிந்திக்க


நம் ஆண்டவர் இயேசு கடவுளாய் இருந்தும் தம்மையே தாழ்த்தி  இவ்வுலகில் மனிதனாக பிறந்து நமக்கு மீட்பளிப்பதற்காக, முடிவில்லா வாழ்வை அருளுவதற்காக , சிலுவைச்சாவை ஏற்று,  உலகின் மேல் அன்பு கூர்ந்தார். நாமும் நம்மையே தாழ்த்தி ஓருவர் மற்றவர் மேல் உண்மையான அன்பு செலுத்தி  இறை சித்தத்தின் படி வாழ்ந்து முடிவில்லா வாழ்வை சுதந்தரித்துக் கொள்வோமா?


Our Lord Jesus though He is God He loved the world so much to humble himself to such an extent to be born in this world and to die for mankind enduring the painful death on the cross to give us eternal life. In the same manner let us humble ourselves to love one another sincerely and live according to His will to earn eternal life. Shall we?


-- Fifteenth Thursday in Ordinary Time - Cycle 2


Wednesday, July 15, 2026

Jul 15

 மனதில் பதிக்க

ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். - மத்தேயு 11:25


 Father, Lord of heaven and earth, for although you have hidden these things from the wise and the learned you have revealed them to the child like. - Matthew 11:25

    மனதில் சிந்திக்க

நம் ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த நாட்களில் அவருடைய அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், படிப்பறிவில்லாத பாமர மீனவர்கள் தாம். அவர்கள் குழந்தைகளின் மனநிலையில் இருந்ததால் நம் ஆண்டவர் அவர்களுக்கு யாருமே புரிந்து கொள்ள முடியாத மறை உண்மைகளை, உவமைகள் வாயிலாக கற்பித்து வந்தார். நாமும் உள்ளத்தில் குழந்தைகளாக மாறி திருவிவிலியத்தை அதிகமாக வாசித்து மறை உண்மைகளை புரிந்து கொள்ளும் தகுதி பெறுவோமா?

When our Lord Jesus lived on Earth, He chose apostles who are uneducated and illiterate fishermen. Since they were simple natured He taught them all the mysteries about God's Kingdom through parables and teachings. Now let us trust in God with childlike faith to read the Bible more and ask Him to reveal the hidden truths about God's Kingdom. Shall we?

-- Fifteenth Wednesday in ordinary time - Cycle 2



Tuesday, July 14, 2026

Jul 14

 மனதில் பதிக்க

தீர்ப்பு நாளில் தீருக்கும், சீதோனுக்கும்  கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்கு கிடைக்கும் தண்டனை கடினமாகவே  இருக்கும். - மத்தேயு 11:22


But I tell you, it will be more tolerable for Tyre and Sidon on the day of judgment than for you. - Matthew 11:22


                                                             மனதில் சிந்திக்க


நாம் பல நேரங்களில் இறைவனிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்டு, அவருடைய அன்பையும் இரக்கத்தையும், நற்செயல்களையும் மறந்து, நம்பிக்கை இழந்து, நன்றிகெட்ட மனிதர்களாகிறோம். இனிமேலாவது நாம் நம்மையே தாழ்த்தி, பணிந்து, இறை சித்தத்திற்கு  கீழ்ப்படிந்து முழு இறைநம்பிக்கையுடன் வாழ வரம் கேட்போமா?


Numerous times we have tasted God's abundant provisions, but still we forget His love, mercy, miracles and loose our faith in Him and become ungrateful people. From now on by humbling ourselves according to His will and honoring Him shall we live our lives trusting Him?


-- Fifteenth Tuesday in Ordinary Time - Cycle 2





Monday, July 13, 2026

Jul 13

 மனதில் பதிக்க

தம்  சிலுவையை சுமக்காமல் என்னை பின்பற்றி வருவோர் என்னுடையோர் என கருதப்பட தகுதியற்றோர். - மத்தேயு 10:38


"whoever does not take up their cross and follow me is not worthy of me" - Matthew 10:38


                                                    மனதில் சிந்திக்க


ஒவ்வொருவருக்கும்  நம் வாழ்க்கையில் பல வகையான சிலுவைகள் உண்டு. நமக்கு சிலுவைகள் கொடுக்கப்படுவதன் காரணம் நாம் இன்னும் அதிகமாக இறையேசுவையே பற்றிக்கொள்ளவும் ஜெபவாழ்வில் நிலைத்திருக்கவும் தான். நமக்கு சிலுவைகள் வரும்போது நம் பாவத்தை உணர்ந்து, பாவ மன்னிப்பு பெற்று சிலுவைகளில் இருந்து விடுதலை பெற அதிகமாக ஜெபவாழ்வில் நிலைத்திருப்போமா?


God gives each one of us different crosses to carry in our lives. Those crosses are given to hold on to Jesus more closely and to pray unceasingly. So, to endure crosses in our lives, let us repent and ask forgiveness so that God will release us from the cross. Shall we pray sincerely and unceasingly?


-- Fifteenth Monday in Ordinary Time - Cycle 2




Sunday, July 12, 2026

Jul 12

 மனதில் பதிக்க

இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர். - ‏மத்தேயு 13:23 


But the seed sown on rich soil is the one who hears the word and understands it, who indeed bears fruit and yields a hundred or sixty or thirtyfold. - Matthew 13:23


                                                         மனதில் சிந்திக்க


இயேசு ஆண்டவர் நம் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றலைக்கொடுத்து அவரவருக்கு ஏற்ற பணியை கடவுளுக்குச்செய்வதற்காக தினமும் அவரது வார்த்தையினால் அழைப்பு விடுக்கின்றார் ஆகவே அவை விழுவதற்கும் பயன்படுவதற்கும் நமது உள்ளங்களை நல்ல நிலமாக பண்படுத்த முன்வருவோமா?


The Lord Jesus grants each of us unique gifts and, through His Word, daily calls us to perform the specific service for God that suits us; shall we, therefore, come forward to cultivate our hearts into good soil so that His Word may take root and bear fruit?


-- Fifteenth Sunday in Ordinary Time - Year A



Saturday, July 11, 2026

Jul 11

 மனதில் பதிக்க

“சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்” - மத்தேயு 10:31


“So there is no need to be afraid; you are worth more than many sparrows.” - Matthew 10:31


                                                       மனதில் சிந்திக்க


நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கவலைகளில் மூழ்கி, இறைவன் நமக்குத் தந்துள்ள  எண்ணற்ற ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தவறுகிறோம். “எந்தச் சூழ்நிலையிலும் இறைவன் நம்மைக் கைவிடமாட்டார்” என்ற முழுமையான நம்பிக்கையை கடவுள் மேல் வளர்த்துக்கொண்டு , எல்லா சூழ்நிலைகளிலும் அவரது திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவரது அன்புக்குரிய பிள்ளைகளாக வாழ முயற்சிப்போமா? சிந்திப்போம்?


We often worry about so many things in our daily lives that we fail to appreciate the countless blessings and the greatness God has already given us. Can we build our complete trust in God that He will never let us down, no matter what and accept His plan in every situation, and strive to live as His beloved children?


-- Fourteenth Saturday in Ordinary time - Cycle 2