Wednesday, September 16, 2026

Sep 16

 மனதில் பதிக்க

“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று”  -  லூக்கா  7 : 35

“But wisdom is proved right by all her children” -  Luke 7: 35

                                                           மனதில் சிந்திக்க

கடவுளின் ஞானம் உலகின் கண்களுக்கு மறைவாக இருக்கலாம்; ஆனால், அவருடைய சித்தப்படி வாழ்ந்து பரிசுத்தத்தின் கனிகளைத் தருவோரின் வாழ்வில் அது வெளிப்படுகிறது. விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் கடவுளின் வழியைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வின் மூலம் அவருடைய ஞானத்திற்குச் சாட்சியாக வாழ்கிறோமா, அல்லது இன்னும் உலகத்தின் ஆசைகளைப் பின்பற்றுகிறோமா? 

God’s wisdom may be hidden from the eyes of the world, yet it is revealed through the lives of those who surrender themselves to His will and bear fruits of holiness. Are we humbly choosing His ways with faith and obedience, allowing our lives to become a living witness to His wisdom, or are we still following the desires of this world?

-- Twenty-Fourth Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, September 15, 2026

Sep 15

 மனதில் பதிக்க

இயேசு தம் சீடரிடம்,  "இவரே உம் தாய்" என்றார் -  யோவான்  19: 26

Jesus said to the disciple, “Here is your mother” - John 19: 26

                                                         மனதில் சிந்திக்க

இயேசு சிலுவையில் தம் உயிரை ஒப்புக்கொடுத்தபோது, ​​தமக்கு மிகவும் பிரியமான அன்னை மரியாளை நம்மிடம் ஒப்படைத்தார். நம் அன்னை நம்முடைய போராட்டங்களின்போது நம்மை மென்மையாக வழிநடத்தி, இயேசுவிடம் நம்மை இன்னும் நெருக்கமாகச் சேர்க்கிறார். அன்னை மரியா நம் இதயங்களைச் செதுக்கி, நித்திய அரசை நோக்கி நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது இன்னும் பாவத்திலேயே நிலைத்திருக்கத் தேர்ந்தெடுக்கிறோமா? 

As Jesus surrendered His life on the Cross, He entrusted His beloved Mother Mary to us. Our Mother gently leads us through our struggles, drawing us ever closer to Her Son, Jesus. Are we allowing Mother Mary to mold our hearts and guide us toward the eternal Kingdom, or are we still choosing to remain in sin?

-- Twenty-Fourth Tuesday in Ordinary Time -Cycle 2




Monday, September 14, 2026

Sep 14

 மனதில் பதிக்க

“தம் மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் ”  - யோவான்   3: 16


“For God so loved the world that He gave His one and only Son “- John 3: 16

                                                         மனதில் சிந்திக்க

நிலையற்றதும் ஆழமற்றதுமான அன்பு நிறைந்த இவ்வுலகில், நம் அப்பா தந்தை நம்மை என்றும் மாறாத அன்புடன் நேசிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவருடைய மாறாத அன்பை நாம் உணர்கிறோமா, அல்லது அவரை மறந்து, நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்திற்கும் காரணம் நாமே என்று நினைக்கிறோமா?


In a world of fleeting and superficial love, our Abba Father loves us with an everlasting love, never abandoning us even when we fall into sin. Do we recognize His unfailing love each day, or do we forget Him and believe that we are the reason for all that we have become?

-- Twenty-Fourth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, September 13, 2026

Sep 13

 மனதில் பதிக்க

“நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?”  மத்தேயு  18: 33


“Shouldn't you have had mercy on your fellow servant just as I had on you?” Matthew 18: 33

                                                      மனதில் சிந்திக்க

நித்திய வாழ்வைப்  பெறுவதற்காக அவரிடமிருந்து நாம் பெற்ற அதே இரக்கத்தைப் பிறருக்கும் காட்டுமாறு இயேசு நம்மிடம் வெறும் வேண்டுகோள் மட்டும் விடுக்கவில்லை, மாறாக அதைக் கட்டளையிடுகிறார்.  கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோமா? அல்லது, ஆன்மீக மந்தநிலையில் உலகத்தின் வழிகளைப் பின்பற்றுகிறோமா?

Jesus does not merely ask us, but commands us to show others the same mercy we have received from Him to gain eternal life. Are we truly living according to Christ’s precepts, allowing His mercy and forgiveness to transform our lives, or are we becoming spiritually lethargic and following the ways of the world?

-- Twenty-Fourth Sunday in Ordinary time - Year A


Saturday, September 12, 2026

Sep 12

 மனதில் பதிக்க

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.திருப்பாடல் - 116:17

To you, Lord, I will offer a sacrifice of praise. Psalm - 116:17


                 மனதில் சிந்திக்க

ஆண்டவரே! மகிழ்ச்சி, சுமை, ஐயம், அருள் ஆகிய அனைத்திலும் நீர் எங்களை உண்மையுடன் தாங்கி நடத்தினீர். எங்கள் நன்றியையும், பணியையும், போராட்டங்களையும், நம்பிக்கையையும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். ஒவ்வோர் ஆசீர்வாதமும் உமது கொடை என்றும், ஒவ்வோர் சோதனையும் உம்மை நோக்கிய பாதை என்றும் உணர எங்களுக்குக் கற்பியுங்கள். இன்று இன்னும் அதிக நம்பிக்கையுள்ள இதயத்தோடு உம்மைப் புகழ எங்களுக்கு வரம் தாரும்.


Lord, you have faithfully carried me through joy, burden, doubt, and grace. I offer You our gratitude, work, struggles, and hope. Teach us to recognize every blessing as Your gift and every trial as a path toward You. Grant us the grace to praise You today with hearts filled with even greater faith and confidence.


-- Twenty-Third Saturday in Ordinary Time - Cycle 2




Friday, September 11, 2026

Sep 11

 மனதில் பதிக்க

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?. - லூக்கா - 6: 39

Can a blind person guide a blind person?. - Luke - 6:39


                                                           மனதில் சிந்திக்க

இயேசு, பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன் நம் இதயங்களை ஆராய அழைக்கிறார். நம் கண்ணிலுள்ள “உத்திரம்,” திருத்துவதற்கு முன் தாழ்மை அவசியம் என்பதை நினைவூட்டுகிறது. நம் பலவீனங்களை உணரும்போது, பிறரிடம் அதிக இரக்கமும் கருணையும் காட்டுவோம். பிறருடைய குறைகளைத் திருத்துவதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோமா, அல்லது இயேசு நம்மை மாற்ற அனுமதிக்கிறோமா?


Jesus invites us to examine our own hearts before judging others. The “log” in our eye reminds us that humility must come before correction. When we recognize our weaknesses, we become more compassionate and merciful toward others. Are we more focused on correcting others’ faults than allowing Jesus to transform ourselves?

-- Twenty-Third Friday in ordinary time - Cycle 2


Thursday, September 10, 2026

Sep 10

 மனதில் பதிக்க

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.- 1 கொரிந்தியர்- 8: 12

When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ. - 1 Corinthians 8: 12

                                                          மனதில் சிந்திக்க

இயேசு நம்மைக் காயப்படுத்தியவர்களிடமும் அன்பு செலுத்தவும், ஆசீர்வதிக்கவும், ஜெபிக்கவும் அழைக்கிறார். பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, அவரது இரக்கத்தைப் பின்பற்றுவோம். நம்மால் முடிந்தவரை நன்மை செய்து, கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் ளிப்படுத்துவோம். மற்றவர்களின் விசுவாசத்தைத் தடுமாறச் செய்வதற்குப்பதிலாக, நம் வார்த்தைகள் மற்றும் முடிவுகள் மூலம் அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்த நம்மால் முடியுமா?


Jesus calls us to love, bless, and pray for those who have hurt us. Instead of retaliating, let us follow His example of mercy. Let us do good whenever possible and manifest Christ’s love and forgiveness in our lives. Instead of causing others' faith to stumble, can we strengthen their faith through our words and decisions?


-- Twenty Third Thursday in Ordinary time - Cycle 2


Wednesday, September 9, 2026

Sep 09

 மனதில் பதிக்க

ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு. - லூக்கா - 6: 20

Blessed are you who are poor; woe to you who are rich! - Luke - 6:20

                                                       மனதில் சிந்திக்க

 செல்வம், வசதி அல்லது புகழ்ச்சி ஆகியவற்றிலிருந்து அல்ல; மாறாக, கடவுள் மீது நம்பிக்கை வைப்பதிலிருந்தும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதிலிருந்தும் தான் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. உலகியல் சார்ந்தவற்றில் பற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, நம்முடைய நேரம், திறமைகள் மற்றும் வளங்களைக் கொண்டு மற்றவர்களை கண்ணியத்துடனும் கனிவுடனும் நடத்த முடியும். நாம்  அன்றாட வசதிக்காக வாழ்கிறோமா , அல்லது கடவுளின் நோக்கத்திற்காக வாழ்கிறோமா ?

 

Blessings come from trusting God and loving others, not from wealth, comfort, or praise. When we do not cling to worldly things, we can use our time, talents, and resources to treat others with dignity and kindness. Are we living for daily comfort, or for God’s purpose?

-- Twenty-Third Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, September 8, 2026

Sep 08

 மனதில் பதிக்க

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் – திருப்பாடல்கள் :13:6


With delight I rejoice in the Lord – Psalm: 13:6

                                                              மனதில் சிந்திக்க

இந்த திருப்பாடல்  துன்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் கடவுளின் இரக்கத்தை நம்ப அழைக்கிறது. மரியாளின் தாழ்மையான சரணாகதியைப் போல, நம் இழப்புகள், கவலைகள், நிறைவேறாத திட்டங்கள் அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைக்கிறோம். நம்பிக்கை துன்பத்தை அகற்றாது; ஆனால் கடவுளின் நன்மையில் உறுதியாகவும் இருக்க நம்மை மாற்றுகிறது. இன்று நாம் கடவுளின் உண்மையான அன்பில் நம்பிக்கை வைத்து சரணடைய முடியுமா?

 

Psalm calls us to trust God’s mercy amid pain and uncertainty. Like Mary’s humble surrender, we place our losses, worries, and broken plans before the Lord. Trust does not erase suffering; it transforms it into hope and confidence in God’s goodness. Can we surrender, trusting God’s faithful love today?


-- Feast of the Nativity of the Blessed Virgin Mary







Monday, September 7, 2026

Sep 07

 மனதில் பதிக்க

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார் -1 கொரிந்தியர் 5: 1

For our Paschal Lamb, Christ, has been sacrificed- 1 Corinthians 5:1


                                                         மனதில் சிந்திக்க

புனித பவுல் , நம் பாஸ்கா ஆட்டுக்குட்டியான கிறிஸ்து நம்மை புதியவர்களாக்குகிறார் என நினைவூட்டுகிறார். பாவம், அகந்தை, மனக்கசப்பு ஆகிய பழைய புளிப்பை அகற்றி, உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளின் திருத்தம் குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் செய்கிறது. இன்று நாம் கிறிஸ்துவிடம் ஒப்படைக்க வேண்டிய பழக்கம் எது?


St. Paul reminds us that Christ, our Paschal Lamb, makes us new. We are called to remove the “old yeast” of sin, pride, and resentment, and live with sincerity and truth. God’s correction is always meant to heal and restore. What is one habit we need to surrender to Christ today?


-- Twenty- Third Monday in Ordinary Time - Cycle 2