Thursday, August 20, 2026

Aug 20

 மனதில் பதிக்க

“உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்” -  எசேக்கியேல் 36:26

“I shall give you a new heart and put a new spirit in you; I shall remove the heart of stone from your bodies and give you a heart of flesh instead.” - Ezekiel 36:26

                                                                                                 

மனதில் சிந்திக்க

நம் படைப்பாளராகிய இறைவன், நம் எண்ணங்களையும், போராட்டங்களையும், செயல்களையும் நன்கு அறிந்திருக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும், அன்புள்ள இறைவன் நம்மை மன்னித்து, நம் உள்ளங்களை மாற்றி, தூய ஆவியானவரின் துணையுடன் புதுப்பிக்கப்பட்ட வாழ்வை வாழச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார். இறைவன் நம் உள்ளங்களை மாற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்து, எப்போதும் அவரது உண்மையான பிள்ளைகளாக வாழ நாம் தயாராக இருக்கிறோமா? 

Our God, our Creator, knows our thoughts, struggles, and actions. Even when we fall into sin, His loving heart is always ready to forgive, transform us, and give us the Holy Spirit to lead a renewed life. Are we ready to open our hearts to God’s transformation and remain His faithful children always?

-- Twentieth Thursday in ordinary Time -Cycle 2



Wednesday, August 19, 2026

Aug 19

 மனதில் பதிக்க


“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” -  தி. பாடல் 23:4

“Even were I to walk in a ravine as dark as death I should fear no danger, for you are at my side.” - Psalms 23:4

                                                                                                 

மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புவது, அவர் நமக்கு சவால்களும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கையை வாக்களித்ததால் அல்ல; மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் அவர் அளிப்பதால். எனவே, நம் நல்ல ஆயனாகிய ஆண்டவர் இயேசுவின் உண்மையுள்ள ஆடுகளாக, அவரது குரலைக் கேட்டு, அவரைப் பின்பற்றி வாழ முயற்சிப்போமா?

 We Christians, believe in our lord Jesus Christ not coz he promises us a life without challenges or struggles, but because He provides us the strength and the courage in all situations. So can we try to lead a life as the faithful sheep of our Good Shepherd and receive His blessings always.

-- Twentieth Wednesday in ordinary time - Cycle 2



Tuesday, August 18, 2026

Aug 18

 மனதில் பதிக்க

“ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!” - எசேக்கியேல் 28:2

“Though you are human, not divine, you have allowed yourself to think like God” - Ezekiel 28:2

  மனதில் சிந்திக்க

கடவுளின் ஆசீர்வாதத்தால் நாம் பெற்ற அறிவையும், திறமையையும், ஆற்றலையும் கொண்டு, பல நேரங்களில் கடவுளைவிட பெரியவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். ஆனால், ஆண்டவரின் கிருபையும் அருளும் இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து வாழ முயல்வோமா? 


Through the knowledge, talents, and abilities we have received through God’s blessings, we often live with the thought that we are greater than God. Can we understand and accept the reality that without the Lord’s grace and blessings, we are nothing and lead a humble life united with God.


-- Twentieth Tuesday in ordinary time - Cycle 2



Monday, August 17, 2026

Aug 17

 மனதில் பதிக்க

“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” - மத்தேயு 19:21

“If you wish to be perfect, go and sell your possessions and give the money to the poor, and you will have treasure in heaven” - Mathew 19:21

         மனதில் சிந்திக்க

கடவுள் நம் அனைவரையும் எல்லா வகையிலும் ஆசீர்வதித்துள்ளார். கடவுள் நமக்கு அளித்தது நமக்காக மட்டுமல்ல; தேவையில் இருப்போருக்கு உதவி செய்து, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவும் என்பதை உணர்ந்து வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்?


God has blessed each one of us abundantly in every way. Can we realize that what God has given us is not meant only for ourselves, but also to help others in their need and be a blessing to others.


-- Twentieth Monday in ordinary time - Cycle 2


Sunday, August 16, 2026

Aug 16

 மனதில் பதிக்க


“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை” -  உரோமையர் 11:29

“There is no change of mind on God's part about the gifts he has made or of his choice.” - Romans 11:29


                                                  மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறோம். நம்மீது அளவற்ற அன்பு கொண்ட நம் தேவன், நாம் எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைத் தள்ளிவிடாமல், அன்போடு அரவணைக்கக் காத்திருக்கிறார். அவருடைய அன்பையும் அழைப்பையும் உணர்ந்து, நம் பாவங்களை விட்டு விலகி, கடவுளின் அன்புப் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோமா?

As Christians, every one of us have been Chosen by God. Our God, who loves us unconditionally, is always waiting to embrace us with love, regardless of the sinful state we may be in.  Can we recognize His love and His call and turn away from our sins, and strive to lead life as the beloved children of God?

-- Twentitn Sunday in Ordinary Time - Year A



Saturday, August 15, 2026

Aug 15

 மனதில் பதிக்க


"இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 132:14

“Zion is my resting place forever; in her will I dwell, for I prefer her.” - Psalm 132:14


                                                       மனதில் சிந்திக்க

நம் ஆண்டவர் நம்மை மிகவும் விரும்பி, நம் இதயத்தைத் தம் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம் நம் இதயத்தைத் தூய்மையாகக் காத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, எப்போதும் அவரைப் பிரியப்படுத்த நாம் தயாரா?


Our Lord desires us so deeply that He has chosen our hearts as His dwelling place. Are we willing to keep our hearts pure through the Sacrament of Confession and strive to obey Him and please Him in all we do?

-- Nineteenth Saturday in ordinary time - Cycle 2



Friday, August 14, 2026

Aug 14

 மனதில் பதிக்க

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். - மத்தேயு 19:6

So they are no longer two, but one flesh. Therefore, what God has joined together, man must not separate." - Matthew 19:6


                                                 மனதில் சிந்திக்க

இயேசு திருமணம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல, அது கடவுளின் படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார். கணவன்-மனைவியை இணைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை கடவுளே ஏற்படுத்துவதால், எந்த அதிகாரத்தாலும் அதை முறிக்க முடியாது. நம் துணையில் கிறிஸ்துவைக் கண்டு, திருமணத்தின் வழியாக இயேசுவோடு ஒன்றிணைய நாம் தயாரா?


Jesus reaffirms that marriage is God’s creation, not man’s invention. Since God establishes the inseparable bond between husband and wife, no civil or religious authority has the power to break it. Are we willing to see Christ in our spouse and unite to Jesus through our marriage?


-- Nineteenth Friday in Ordinary Time - Cycle 2


Thursday, August 13, 2026

Aug 13

 மனதில் பதிக்க


உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். - மத்தேயு 18:35

So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart. - Matthew 18:35


                                                        மனதில் சிந்திக்க

கடவுள் நம்மீது காட்டிய இரக்கத்தையும் மன்னிப்பையும் போல, நாமும் பிறரிடம் இரக்கமும் மன்னிப்பும் காட்ட வேண்டும். கடந்ததை விட்டுவிட்டு, நம் சகோதர சகோதரிகளை மனதார மன்னித்து, கிறிஸ்துவின் அன்பு நம் ஆழமான காயங்களை குணப்படுத்த அனுமதிக்கிறோமா?


God calls us to be merciful and forgiving to others, just as we have received His mercy and forgiveness. Are we willing to forgive our brothers and sisters from our hearts, let go of the past and allow Christ’s love to heal the deep wounds within us?


-- Nineteenth Thursday in Ordinary Time - Cycle 2





Wednesday, August 12, 2026

Aug 12

 மனதில் பதிக்க

இபெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.- திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:14

In the way of your decrees I rejoice, as much as in all riches. - Psalm 119:14


                                                         மனதில் சிந்திக்க

கர்த்தருடைய சட்டம் எல்லாச் செல்வங்களையும் விட மேலானது; அது நமக்கு உண்மையான ஞானத்தை அளிக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது நமக்கு அமைதியையும், பாவத்தை வெல்லும் வலிமையையும் தரும் ஆசீர்வாதம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் மகிழ நாம் தயாரா?


The law of the Lord is more valuable than any riches, because it gives us true wisdom. Observing His commandments is a blessing, bringing us peace and strength to overcome sin. Are we willing to obey His commandments and delight in Him?


-- Nineteenth Week In Ordinary Time - Cycle 2




Tuesday, August 11, 2026

Aug 11

 மனதில் பதிக்க

இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். மத்தேயு 18:4

Whoever becomes humble like this child is the greatest in the Kingdom of heaven. Matthew 18:4

                                                          மனதில் சிந்திக்க

கடவுள் எல்லாவற்றையும் விட தாழ்மையான, கீழ்ப்படிதலுள்ள இதயத்தையே மதிக்கிறார். குழந்தையைப் போல (குழந்தைத்தனமாக அல்ல) அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்தைச் செய்ய நம்மை அழைக்கிறார். நம் விருப்பங்களை விட்டுவிட்டு, அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்திற்குக் கீழ்ப்படிய நாம் தயாராக இருக்கிறோமா?


God values a humble and obedient heart more than anything. He calls us to be childlike (not childish) trusting Him completely and seeking to do His will. Are we willing to surrender our own ways, trust Him completely, and obey His will?

-- Nineteenth Tuesday in Ordinary Time - Cycle 2