Thursday, September 3, 2026

Sep 03

மனதில் பதிக்க

இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். - லூக்கா 5:10

Jesus said to Simon, “Do not be afraid; from now on you will be catching men.”  - Luke 5:10

                                                           மனதில் சிந்திக்க

இறை அரசை கட்டி எழுப்ப அன்று சீமோனை அழைத்த இயேசு ஆண்டவர் இன்று நம் ஓவ்வொருவரையும் அழைக்கின்றார். ஆனால் நாம் நமது சொந்த தேவைகளை முன்னிட்டு இறைவனுடைய காரியங்களை அல்லது மறைபரப்பு பணியை செய்வதில் தாமதம் காண்பித்து  வருகின்றோம். எனவே இனிமேலும் தயங்காமல் மறைபரப்பு பணியில் உற்சாகமாக ஈடுபடுவோமா?


The Lord Jesus, who once called Simon to build up the Kingdom of God, calls each of us today. Yet, prioritizing our own needs, we delay engaging in God’s work or the mission of evangelization. Shall we, therefore, cast aside hesitation and enthusiastically commit ourselves to this missionary task?


-- Twenty-Second Thursday In Ordinary Time - Cycle 2





Wednesday, September 2, 2026

Sep 02

 மனதில் பதிக்க

நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.- 1கொரிந்தியர் 3:2

I fed you milk, not solid food, because you were unable to take it. Indeed, you are still not able, even now - 1 Corinthians 3:2

                                                          மனதில் சிந்திக்க

நாம் இன்னும் உலக நாட்டங்களிலேயே மூழ்கி ஊனியல்பிலிருந்து விடுபட முடியாமல் அல்லது விடுபட விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதால் இன்னொரு கிறிஸ்துவாக வாழ முடியவில்லை. தூய ஆவியின் துணையோடு இவைகளில் இருந்து விடுபட்டு  இன்னொரு கிறிஸ்துவாக வாழ முன்வருவோமா?


We are unable to live as 'another Christ'—or perhaps lack the desire to do so—because we remain immersed in worldly pursuits and cannot break free from our carnal nature. Shall we step forward to break free from these things with the help of the Holy Spirit and live as 'another Christ'?


-- Twenty-Second Wednesday in Ordinary Time - Cycle 2




Tuesday, September 1, 2026

Sep 01

 மனதில் பதிக்க

ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?. நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம். - 1 கொரிந்தியர் 2:16

For “who has known the mind of the Lord, so as to counsel him?” But we have the mind of Christ. - 1 Corinthians 2:16

                                                         மனதில் சிந்திக்க

நாம் மற்றவருக்கு நன்மை செய்தபோதும் நமக்கு தீமை வரும்போது கடளிடம் கேள்வி எழுப்புகின்றோம். ஏன் ஆண்டவரே எனக்கு இத்தீமையை அனுமதித்தீர்கள் என்று. ஆனால் கிறிஸ்துவின் மனதைக் கொண்டுள்ள நாம் அந்த தீமைக்குப் பின் அனேக நன்மைகள் இருக்கின்றன; இறைவன் நன்மையன்றி தீமையை ஒருபோதும் வரவிடமாட்டார் என்று நம்புவோமா? 

When we face adversity despite having done good to others, we question God, asking, "Lord, why did You allow this evil to befall me?" Yet, as those who possess the mind of Christ, do we believe that there are many blessings hidden behind that adversity—and that God would never permit evil without a greater good in mind?


-- Twenty-Second Tuesday in Ordinary time - Cycle 2


Monday, August 31, 2026

Aug 31

 மனதில் பதிக்க

நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. - 1 கொரிந்தியர் 2:4

My message and my proclamation were not with persuasive words of wisdom, but with a demonstration of spirit and power - 1 Corinthians 2:4

                                                          மனதில் சிந்திக்க

நமது இயேசு ஆண்டவர் தூய ஆவியானவரை நமக்காக தந்திருக்கின்றார். எனவே நமது செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள், அனைத்தும்   தூய ஆவியானவரின் விருப்பத்தோடும், அவரது வல்லமையோடும் தான் நடைபெறுகிறதா என்பதை அடிக்கடி பரிசீலனை பண்ணுகின்றோமா என்று சிந்திப்போம்.

Our Lord Jesus has given us the Holy Spirit. Therefore, let us reflect on whether we frequently examine whether all our actions, words, and thoughts are taking place in accordance with the will and power of the Holy Spirit.


-- Twenty-Second Monday in Ordinary Time - Cycle 2


Sunday, August 30, 2026

Aug 30

 மனதில் பதிக்க

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். - மத்தேயு  16:24 


Whoever wishes to come after me must deny himself, take up his cross, and follow me. - Matthew 16:24

                                                       மனதில் சிந்திக்க

இயேசுவை பின்பற்றுவது என்பது நம் சொந்த விருப்பங்களைக் கடந்து, அவரின் வழியைத் தேர்ந்தெடுக்கும் தாழ்மையான, பிறருக்காக ஒப்புக்கொடுக்கும்  வாழ்க்கையாகும். நாம் நம்  சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டியும், அவர் அழைக்கும் பாதையில் தைரியமாக முன்னேறவும் முயல்வோமா?


Following Jesus is a humble life of self-surrender for the sake of others, transcending our own desires to choose His way. Shall we strive to seek the grace to bear our crosses with fortitude and to move forward courageously along the path to which He calls us?


-- Twenty-Second Sunday in ordinary time - Cycle 2


Saturday, August 29, 2026

Aug 29

 மனதில் பதிக்க


பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். - 1 கொரிந்தியர் 1:29

Whoever boasts, should boast in the Lord. - 1 Corinthians 1:29


                                                           மனதில் சிந்திக்க

எல்லாப் புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய உன்னதவராம் கடவுள், நமது மீட்புக்காகத் தம்மையே தாழ்த்தி மனித உருவெடுத்தார். அவ்வாறிருக்க, நமது மீட்பின் முழுமுதற் காரணமாய் விளங்கும் அவரைப் பற்றிப் பெருமைப் பாராட்டாமல் நம்மால் எவ்வாறு வாழ இயலும்?


God Most High assumed human form for the sake of our salvation, humbling Himself who is worthy of all praise and glory. How then can we live without proclaiming Him, the ultimate author of our salvation?

-- Twenty-First Saturday in Ordinary Time - Cycle 2


Friday, August 28, 2026

Aug 28

 மனதில் பதிக்க

எப்பொழுதும் விழிப்பாய் இருந்து செபியுங்கள். - லூக்கா 21:36

Be vigilant at all times and pray. -  Luke 21:36

                                                          மனதில் சிந்திக்க

எல்லாச் சூழ்நிலையிலும் செபம் இன்றியமையாதது என்பதை இயேசு நமக்குக் காட்டியுள்ளார். அது கடவுளுடனான நம் உறவின் அடித்தளம். நாம் கற்பனை செய்வதை விடச் சிறந்த வழிகளில் அவர் பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்து, செபத்தின் வழியாக அவரோடு எப்போதும் பேச நம்மால் அர்ப்பணிக்க முடியுமா?


Jesus showed us that prayer is essential in every circumstance. It is our direct link to God and the foundation of our relationship with Him. Can we commit talking to Him through prayer always remembering that He answers us in ways far better than we can imagine?

-- Twenty-First Friday in ordinary time - Cycle 2


Thursday, August 27, 2026

Aug 27

 மனதில் பதிக்க

விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. - மத்தேயு 24:42

Stay awake! For you do not know on which day your Lord will come. - Matthew 24:42

                                                          மனதில் சிந்திக்க

இவ்வுலக வாழ்வு குறுகியது; கிறிஸ்து எந்நேரமும் வரலாம். எனவே, ஆன்மீக விழிப்புணர்வே நம் முதல் இலக்காக இருக்க வேண்டும். உண்மையான ஞானம் என்பது அழியும் உலக இன்பங்களைத் துறந்து, இறைவனின் நித்திய அரசில் முதலீடு செய்வதே ஆகும். நம் அன்றாட வாழ்வை ஆராய்ந்து, இந்த தற்காலிக உலகை விட நித்திய வாழ்வுக்காக உழைப்போமா?"


Given the brevity of our earthly life and the uncertainty of Christ’s return, spiritual vigilance must be our ultimate pursuit. True wisdom prompts us to invest in God's eternal kingdom rather than chase the fleeting shadows of this world. When we examine how we spend our days, can we labor for eternal life rather than a passing worldly life?

-- Twenty-First Thursday in ordinary time - Cycle 2


Wednesday, August 26, 2026

Aug 26

 மனதில் பதிக்க

அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! - 2 தெசலோனிக்கர் 3:16

May the Lord of peace himself give you peace at all times and in every way. The Lord be with all of you. - 2 Thessalonians 3:16

    மனதில் சிந்திக்க

இயேசுவே அமைதியின் அரசர். அவர் நமக்குள் வாழும்போது, உலகம் தர முடியாத ஆழமான அமைதியை நாம் பெறுகிறோம். பிறரை நேசிப்பதன் மூலமும், உலக வழிகளை விட அவர் போதனைகளுக்கு முதலிடம் தருவதன் மூலமும், இந்த அமைதியை நம் வாழ்வில் வரவேற்போமா?


Jesus is the Prince of Peace. When He dwells within us, we experience a profound peace that the world can never replicate. Can we, then, actively invite this peace into our lives by choosing to love others and prioritizing His eternal teachings over the fleeting ways of the world?


-- Twenty- first Wednesday in ordinary time - cycle 2




Tuesday, August 25, 2026

Aug 25

 மனதில் பதிக்க

நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். - மத்தேயு 23:25

You cleanse the outside of cup and dish, but inside they are full of plunder and self-indulgence. - Matthew 23:25

                                                        மனதில் சிந்திக்க

வெளிப்புற நடத்தையைவிட அகத்து எண்ணங்களுக்கே இயேசு முக்கியத்துவம் அளிக்கிறார். வெளியில் இருந்து செல்பவை அல்ல, உள்ளத்திலிருந்து வெளிவருபவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என்கிறார். இதை உணர்ந்த நாம், புறத்தோற்றத்தைத் தவிர்த்து, உள்ளார்ந்த நற்பண்புகளை வளர்ப்பதில் முன்னுரிமை செலுத்துவோமா?


Jesus teaches that our inner motives carry far greater weight than our outward behavior. He insists that we are defiled not by what enters us from the outside, but by what comes out of our hearts. Knowing this, can we prioritize our internal character over external impressions?

-- Twenty-First Tuesday in ordinary time - Cycle 2