Saturday, September 19, 2026

Sep 19

 மனதில் பதிக்க

“அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன”  -  லூக்கா  8 : 8

“It came up and yielded a crop, a hundred times more than was sown”  -  Luke 8 : 8

                                                            மனதில் சிந்திக்க

விதைப்பவரின் உவமையின் மூலம், இயேசு நம் இதயத்தின் நிலையை ஆராய்ந்து, அவரது வார்த்தை நம் உள்ளத்தில் வேரூன்றி, நம்மை மாற்றியமைக்க அனுமதிக்குமாறு அழைக்கிறார். நாம் நல்ல நிலமாக மாற முயற்சிக்கிறோமா, அல்லது பாவங்கள், சோதனைகள், கவலைகள் மற்றும் உலக இன்பங்களால் தடுக்கப்பட்டு, வழி ஓரத்திலோ, பாறை நிலத்திலோ அல்லது முட்செடிகளுக்கு இடையிலோ விழுந்த விதையைப் போல இன்னும் இருக்கிறோமா?

Through the parable of the sower, Jesus calls us to examine the soil of our hearts and allow His Word to take root and transform us. Are we striving to become good soil that bears abundant fruit, or are we still like the seed on the path, the rocky ground, and among the thorns, held back by our sins, trials, worries, and worldly pleasures?

-- Twenty-Fourth Saturday in Ordinary Time - Cycle 2




Friday, September 18, 2026

Sep 18

 மனதில் பதிக்க

“இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்”  -  லூக்கா  8 : 1

“Jesus traveled about from one town and village to another, proclaiming the good news”- Luke 8 : 1

                                                         மனதில் சிந்திக்க

இயேசு இறைமகனாக இருந்தபோதிலும், தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தாழ்மையான பாதையைத் தேர்ந்தெடுத்து, கீழ்ப்படிதலுடன் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இயேசுவைப் பின்பற்றுவது சிலுவை, துன்பம், தாழ்மை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாகும் என்பதை நாம் உணர்கிறோமா? அல்லது அவர் நம்மைச் சுகமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு மட்டுமே அழைக்கிறார் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா? 

Though Jesus is the Son of God, He chose the humble path of fulfilling His Father’s will and obediently embraced the cross. Do we still believe that following Jesus means embracing the cross, suffering, and humility, or are we deceiving ourselves by thinking that He calls us only to a life of comfort and happiness?

-- Twenty Fourth Friday in ordinary time - cycle 2




Thursday, September 17, 2026

Sep 17

 மனதில் பதிக்க

“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”  -  லூக்கா  7 : 50

“Your faith has saved you; go in peace”  -  Luke 7 : 50

                                                         மனதில் சிந்திக்க

மக்களால் பாவி என்று அறியப்பட்ட அந்தப் பெண், விசுவாசத்துடனும் நொறுங்கிய உள்ளத்துடனும் இயேசுவை அணுகி, அவர் அளித்த இரக்கத்திற்குப் பதிலாகத் தனது அன்பை அவரது பாதங்களில் பொழிந்தாள். நாமும் ஆண்டவரின் அளவற்ற இரக்கத்திற்கு, அதே தாழ்மையுடனும் அன்புடனும் பதிலளிக்கிறோமா? அல்லது அவருடைய இரக்கம் நமக்குத் தேவை என்பதை உணரத் தவறுகிறோமா? 

The woman known in the town as a sinner approached Jesus with faith and a contrite heart, and in response to His mercy, she poured out her love at His feet. Do we respond to the Lord’s unfailing mercy with the same humility and love, or do we fail to realize our need for His mercy?

-- Twenty Fourth Thursday in ordinary time - Cycle 2




Wednesday, September 16, 2026

Sep 16

 மனதில் பதிக்க

“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று”  -  லூக்கா  7 : 35

“But wisdom is proved right by all her children” -  Luke 7: 35

                                                           மனதில் சிந்திக்க

கடவுளின் ஞானம் உலகின் கண்களுக்கு மறைவாக இருக்கலாம்; ஆனால், அவருடைய சித்தப்படி வாழ்ந்து பரிசுத்தத்தின் கனிகளைத் தருவோரின் வாழ்வில் அது வெளிப்படுகிறது. விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் கடவுளின் வழியைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வின் மூலம் அவருடைய ஞானத்திற்குச் சாட்சியாக வாழ்கிறோமா, அல்லது இன்னும் உலகத்தின் ஆசைகளைப் பின்பற்றுகிறோமா? 

God’s wisdom may be hidden from the eyes of the world, yet it is revealed through the lives of those who surrender themselves to His will and bear fruits of holiness. Are we humbly choosing His ways with faith and obedience, allowing our lives to become a living witness to His wisdom, or are we still following the desires of this world?

-- Twenty-Fourth Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, September 15, 2026

Sep 15

 மனதில் பதிக்க

இயேசு தம் சீடரிடம்,  "இவரே உம் தாய்" என்றார் -  யோவான்  19: 26

Jesus said to the disciple, “Here is your mother” - John 19: 26

                                                         மனதில் சிந்திக்க

இயேசு சிலுவையில் தம் உயிரை ஒப்புக்கொடுத்தபோது, ​​தமக்கு மிகவும் பிரியமான அன்னை மரியாளை நம்மிடம் ஒப்படைத்தார். நம் அன்னை நம்முடைய போராட்டங்களின்போது நம்மை மென்மையாக வழிநடத்தி, இயேசுவிடம் நம்மை இன்னும் நெருக்கமாகச் சேர்க்கிறார். அன்னை மரியா நம் இதயங்களைச் செதுக்கி, நித்திய அரசை நோக்கி நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது இன்னும் பாவத்திலேயே நிலைத்திருக்கத் தேர்ந்தெடுக்கிறோமா? 

As Jesus surrendered His life on the Cross, He entrusted His beloved Mother Mary to us. Our Mother gently leads us through our struggles, drawing us ever closer to Her Son, Jesus. Are we allowing Mother Mary to mold our hearts and guide us toward the eternal Kingdom, or are we still choosing to remain in sin?

-- Twenty-Fourth Tuesday in Ordinary Time -Cycle 2




Monday, September 14, 2026

Sep 14

 மனதில் பதிக்க

“தம் மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் ”  - யோவான்   3: 16


“For God so loved the world that He gave His one and only Son “- John 3: 16

                                                         மனதில் சிந்திக்க

நிலையற்றதும் ஆழமற்றதுமான அன்பு நிறைந்த இவ்வுலகில், நம் அப்பா தந்தை நம்மை என்றும் மாறாத அன்புடன் நேசிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவருடைய மாறாத அன்பை நாம் உணர்கிறோமா, அல்லது அவரை மறந்து, நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்திற்கும் காரணம் நாமே என்று நினைக்கிறோமா?


In a world of fleeting and superficial love, our Abba Father loves us with an everlasting love, never abandoning us even when we fall into sin. Do we recognize His unfailing love each day, or do we forget Him and believe that we are the reason for all that we have become?

-- Twenty-Fourth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, September 13, 2026

Sep 13

 மனதில் பதிக்க

“நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?”  மத்தேயு  18: 33


“Shouldn't you have had mercy on your fellow servant just as I had on you?” Matthew 18: 33

                                                      மனதில் சிந்திக்க

நித்திய வாழ்வைப்  பெறுவதற்காக அவரிடமிருந்து நாம் பெற்ற அதே இரக்கத்தைப் பிறருக்கும் காட்டுமாறு இயேசு நம்மிடம் வெறும் வேண்டுகோள் மட்டும் விடுக்கவில்லை, மாறாக அதைக் கட்டளையிடுகிறார்.  கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்து, அவருடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறோமா? அல்லது, ஆன்மீக மந்தநிலையில் உலகத்தின் வழிகளைப் பின்பற்றுகிறோமா?

Jesus does not merely ask us, but commands us to show others the same mercy we have received from Him to gain eternal life. Are we truly living according to Christ’s precepts, allowing His mercy and forgiveness to transform our lives, or are we becoming spiritually lethargic and following the ways of the world?

-- Twenty-Fourth Sunday in Ordinary time - Year A


Saturday, September 12, 2026

Sep 12

 மனதில் பதிக்க

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.திருப்பாடல் - 116:17

To you, Lord, I will offer a sacrifice of praise. Psalm - 116:17


                 மனதில் சிந்திக்க

ஆண்டவரே! மகிழ்ச்சி, சுமை, ஐயம், அருள் ஆகிய அனைத்திலும் நீர் எங்களை உண்மையுடன் தாங்கி நடத்தினீர். எங்கள் நன்றியையும், பணியையும், போராட்டங்களையும், நம்பிக்கையையும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். ஒவ்வோர் ஆசீர்வாதமும் உமது கொடை என்றும், ஒவ்வோர் சோதனையும் உம்மை நோக்கிய பாதை என்றும் உணர எங்களுக்குக் கற்பியுங்கள். இன்று இன்னும் அதிக நம்பிக்கையுள்ள இதயத்தோடு உம்மைப் புகழ எங்களுக்கு வரம் தாரும்.


Lord, you have faithfully carried me through joy, burden, doubt, and grace. I offer You our gratitude, work, struggles, and hope. Teach us to recognize every blessing as Your gift and every trial as a path toward You. Grant us the grace to praise You today with hearts filled with even greater faith and confidence.


-- Twenty-Third Saturday in Ordinary Time - Cycle 2




Friday, September 11, 2026

Sep 11

 மனதில் பதிக்க

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?. - லூக்கா - 6: 39

Can a blind person guide a blind person?. - Luke - 6:39


                                                           மனதில் சிந்திக்க

இயேசு, பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன் நம் இதயங்களை ஆராய அழைக்கிறார். நம் கண்ணிலுள்ள “உத்திரம்,” திருத்துவதற்கு முன் தாழ்மை அவசியம் என்பதை நினைவூட்டுகிறது. நம் பலவீனங்களை உணரும்போது, பிறரிடம் அதிக இரக்கமும் கருணையும் காட்டுவோம். பிறருடைய குறைகளைத் திருத்துவதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோமா, அல்லது இயேசு நம்மை மாற்ற அனுமதிக்கிறோமா?


Jesus invites us to examine our own hearts before judging others. The “log” in our eye reminds us that humility must come before correction. When we recognize our weaknesses, we become more compassionate and merciful toward others. Are we more focused on correcting others’ faults than allowing Jesus to transform ourselves?

-- Twenty-Third Friday in ordinary time - Cycle 2


Thursday, September 10, 2026

Sep 10

 மனதில் பதிக்க

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.- 1 கொரிந்தியர்- 8: 12

When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ. - 1 Corinthians 8: 12

                                                          மனதில் சிந்திக்க

இயேசு நம்மைக் காயப்படுத்தியவர்களிடமும் அன்பு செலுத்தவும், ஆசீர்வதிக்கவும், ஜெபிக்கவும் அழைக்கிறார். பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, அவரது இரக்கத்தைப் பின்பற்றுவோம். நம்மால் முடிந்தவரை நன்மை செய்து, கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் ளிப்படுத்துவோம். மற்றவர்களின் விசுவாசத்தைத் தடுமாறச் செய்வதற்குப்பதிலாக, நம் வார்த்தைகள் மற்றும் முடிவுகள் மூலம் அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்த நம்மால் முடியுமா?


Jesus calls us to love, bless, and pray for those who have hurt us. Instead of retaliating, let us follow His example of mercy. Let us do good whenever possible and manifest Christ’s love and forgiveness in our lives. Instead of causing others' faith to stumble, can we strengthen their faith through our words and decisions?


-- Twenty Third Thursday in Ordinary time - Cycle 2