Showing posts with label Daily Reflection. Show all posts
Showing posts with label Daily Reflection. Show all posts

Sunday, August 16, 2026

Aug 16

 மனதில் பதிக்க


“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை” -  உரோமையர் 11:29

“There is no change of mind on God's part about the gifts he has made or of his choice.” - Romans 11:29


                                                  மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறோம். நம்மீது அளவற்ற அன்பு கொண்ட நம் தேவன், நாம் எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைத் தள்ளிவிடாமல், அன்போடு அரவணைக்கக் காத்திருக்கிறார். அவருடைய அன்பையும் அழைப்பையும் உணர்ந்து, நம் பாவங்களை விட்டு விலகி, கடவுளின் அன்புப் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோமா?

As Christians, every one of us have been Chosen by God. Our God, who loves us unconditionally, is always waiting to embrace us with love, regardless of the sinful state we may be in.  Can we recognize His love and His call and turn away from our sins, and strive to lead life as the beloved children of God?

-- Twentitn Sunday in Ordinary Time - Year A



Saturday, August 15, 2026

Aug 15

 மனதில் பதிக்க


"இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 132:14

“Zion is my resting place forever; in her will I dwell, for I prefer her.” - Psalm 132:14


                                                       மனதில் சிந்திக்க

நம் ஆண்டவர் நம்மை மிகவும் விரும்பி, நம் இதயத்தைத் தம் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம் நம் இதயத்தைத் தூய்மையாகக் காத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, எப்போதும் அவரைப் பிரியப்படுத்த நாம் தயாரா?


Our Lord desires us so deeply that He has chosen our hearts as His dwelling place. Are we willing to keep our hearts pure through the Sacrament of Confession and strive to obey Him and please Him in all we do?

-- Nineteenth Saturday in ordinary time - Cycle 2



Friday, August 14, 2026

Aug 14

 மனதில் பதிக்க

இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். - மத்தேயு 19:6

So they are no longer two, but one flesh. Therefore, what God has joined together, man must not separate." - Matthew 19:6


                                                 மனதில் சிந்திக்க

இயேசு திருமணம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல, அது கடவுளின் படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார். கணவன்-மனைவியை இணைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை கடவுளே ஏற்படுத்துவதால், எந்த அதிகாரத்தாலும் அதை முறிக்க முடியாது. நம் துணையில் கிறிஸ்துவைக் கண்டு, திருமணத்தின் வழியாக இயேசுவோடு ஒன்றிணைய நாம் தயாரா?


Jesus reaffirms that marriage is God’s creation, not man’s invention. Since God establishes the inseparable bond between husband and wife, no civil or religious authority has the power to break it. Are we willing to see Christ in our spouse and unite to Jesus through our marriage?


-- Nineteenth Friday in Ordinary Time - Cycle 2


Thursday, August 13, 2026

Aug 13

 மனதில் பதிக்க


உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். - மத்தேயு 18:35

So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart. - Matthew 18:35


                                                        மனதில் சிந்திக்க

கடவுள் நம்மீது காட்டிய இரக்கத்தையும் மன்னிப்பையும் போல, நாமும் பிறரிடம் இரக்கமும் மன்னிப்பும் காட்ட வேண்டும். கடந்ததை விட்டுவிட்டு, நம் சகோதர சகோதரிகளை மனதார மன்னித்து, கிறிஸ்துவின் அன்பு நம் ஆழமான காயங்களை குணப்படுத்த அனுமதிக்கிறோமா?


God calls us to be merciful and forgiving to others, just as we have received His mercy and forgiveness. Are we willing to forgive our brothers and sisters from our hearts, let go of the past and allow Christ’s love to heal the deep wounds within us?


-- Nineteenth Thursday in Ordinary Time - Cycle 2





Wednesday, August 12, 2026

Aug 12

 மனதில் பதிக்க

இபெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.- திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:14

In the way of your decrees I rejoice, as much as in all riches. - Psalm 119:14


                                                         மனதில் சிந்திக்க

கர்த்தருடைய சட்டம் எல்லாச் செல்வங்களையும் விட மேலானது; அது நமக்கு உண்மையான ஞானத்தை அளிக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது நமக்கு அமைதியையும், பாவத்தை வெல்லும் வலிமையையும் தரும் ஆசீர்வாதம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் மகிழ நாம் தயாரா?


The law of the Lord is more valuable than any riches, because it gives us true wisdom. Observing His commandments is a blessing, bringing us peace and strength to overcome sin. Are we willing to obey His commandments and delight in Him?


-- Nineteenth Week In Ordinary Time - Cycle 2




Tuesday, August 11, 2026

Aug 11

 மனதில் பதிக்க

இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். மத்தேயு 18:4

Whoever becomes humble like this child is the greatest in the Kingdom of heaven. Matthew 18:4

                                                          மனதில் சிந்திக்க

கடவுள் எல்லாவற்றையும் விட தாழ்மையான, கீழ்ப்படிதலுள்ள இதயத்தையே மதிக்கிறார். குழந்தையைப் போல (குழந்தைத்தனமாக அல்ல) அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்தைச் செய்ய நம்மை அழைக்கிறார். நம் விருப்பங்களை விட்டுவிட்டு, அவரை முழுமையாக நம்பி, அவரது திருவுளத்திற்குக் கீழ்ப்படிய நாம் தயாராக இருக்கிறோமா?


God values a humble and obedient heart more than anything. He calls us to be childlike (not childish) trusting Him completely and seeking to do His will. Are we willing to surrender our own ways, trust Him completely, and obey His will?

-- Nineteenth Tuesday in Ordinary Time - Cycle 2



Monday, August 10, 2026

Aug 10

 மனதில் பதிக்க


தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். - யோவான் 12:25

Whoever loves his life loses it, and whoever hates his life in this world will preserve it for eternal life. - John 12:25


                                                       மனதில் சிந்திக்க

நாம் நமக்குள் இறந்து, நம்மைத் தியாகம் செய்யும்போதுதான், இறைவனிடமிருந்து நிறைவான வாழ்வைப் பெற்று, அவருடைய அன்பையும் வாழ்வையும் பிறருக்கு வழங்கும் கருவிகளாக முடியும். இறைவன் என்னுள் நிறைவாக நிறைந்து, என் வழியாகச் செயல்பட நான் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?


Only when we die to ourselves can we receive the fullness of life from God and become channels of His life and love to others. What do I need to surrender or die to in myself so that God can fill me more fully and work through me?

-- Nineteenth Monday in Ordinary Time - Cycle 2


Sunday, August 9, 2026

Aug 09

 மனதில் பதிக்க


"துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்". - மத்தேயு 14:27

Take courage, it is I; do not be afraid.” - Matthew 14:27


                                                        மனதில் சிந்திக்க

இயேசுவிடமிருந்து விலகி இருக்கும்போது, நம் பிரச்சினைகளில் நாம் எளிதில் தடுமாறி, துவண்டு போகிறோம். ஆனால் அவருடன் நம் உறவைப் புதுப்பித்து, அவரிடம் நெருங்கி வரும்போது, யாவே நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் எந்தப் புயலையும் அச்சமின்றி எதிர்கொள்ளலாம். இயேசுவிடம் இன்னும் நெருங்கி, அவருடன் ஒன்றிப்புடன் வாழ நாம் தயாரா?


When we are far from Jesus we can easily feel lost and overwhelmed by our struggles. But as we renew our relationship with Him and grow closer to Him, we can face every storm without fear knowing that Yahweh is with us. Are we willing to draw closer to Jesus and remain in union with Him?


-- Nineteenth Sunday in Ordinary Time - Year A



Saturday, August 8, 2026

Aug 08

 மனதில் பதிக்க


“உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்” - மத்தேயு  17: 20

“Because you have so little faith” - Matthew 17: 20

                                                       மனதில் சிந்திக்க


சீடர்களிடம் இயேசு கூறிய வார்த்தைகள், நம்முடைய விசுவாசத்தின் ஆழத்தை ஆராய நம்மை அழைக்கின்றன. ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும்போது மட்டுமே நாம் ஆண்டவரை நம்புகிறோமா? அல்லது வாழ்க்கையின் மிக இருண்ட தருணங்களிலும் அவரோடு உறுதியாக நிலைத்திருக்கிறோமா? 


Jesus’ words to the disciples challenge us to examine the depth of our own faith. Do we seek and praise God only when blessings flow our way, Or do we remain steadfast, holding on to Him even in the darkest moments of life?


-- Eighteenth Saturday in Ordinary Time - Cycle 2


Friday, August 7, 2026

Aug 07

 மனதில் பதிக்க


“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” - மத்தேயு  16: 26

“Will you gain anything if you win the whole world but lose your life?” - Matthew 16: 26                                                                                              

  மனதில் சிந்திக்க

புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்வை மாற்றியமைத்த இயேசுவின் இவ்வார்த்தைகள், நம்முடைய சொந்த வாழ்வையும் சுயபரிசோதனை செய்துகொள்ள நம்மை அழைக்கின்றன. செல்வம், அந்தஸ்து, மனித அங்கீகாரம் போன்ற நிலையற்ற உலக ஆசைகளுக்காக நம் ஆன்மாவை இழக்கிறோமா, அல்லது கிறிஸ்துவில் உள்ள நித்திய வாழ்வைத் தேடுகிறோமா? 


These words of Jesus, which transformed the life of St. Francis Xavier, also invites us to examine our own lives. Are we losing our souls in pursuit of temporary worldly desires such as wealth, status, and human recognition, or are we seeking the eternal life found in Christ?

-- Eighteenth Friday in ordinary time - Cycle 2


Thursday, August 6, 2026

Aug 06

 மனதில் பதிக்க


“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.”  - மத்தேயு  17: 5

“This is my beloved Son, with whom I am well pleased. Listen to him.” - Matthew 17:5                                                                                                 

 மனதில் சிந்திக்க

இவ்வார்த்தைகள், கீழ்ப்படிதலுள்ள தம் மகன் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் பெருமையை வெளிப்படுத்துகின்றன. இயேசு, இறைமகனாகவும், இரக்கமுள்ள ஊழியராகவும் வாழ்ந்து, நமக்குச் சிறந்த முன்மாதிரியை விட்டுச் சென்றார். நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நம் இறைத்தந்தைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறோமா? அல்லது கிறிஸ்துவைப் போல மாறாமல் அவரை வெறுமனே வியந்து ரசிப்பதிலேயே திருப்தியடைகிறோமா?

These words reveal the pride of a Father in His obedient Son. Jesus lived as a faithful son, and a compassionate servant, leaving us the perfect example to follow. Are we following His example and bringing joy to our Heavenly Father, or are we content with admiring Christ without truly becoming more like Him?


-- Feast of the Transfiguration of the Lord



Wednesday, August 5, 2026

Aug 05

 மனதில் பதிக்க


“அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்”  - மத்தேயு  15: 28

“Woman, you have great faith. Your request is granted" - Matthew 15: 28

                                                                                                  

மனதில் சிந்திக்க


நமது சூழ்நிலைகள் எவ்வளவு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், ஆண்டவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் நினைவுகூருகிறோம். நிலையான தீர்வைக் கொண்ட அவரிடம் காத்திருப்பதற்குப் பதிலாக, நமது சொந்த அறிவை நம்பி தற்காலிகத் தீர்வுகளைத் தேடுகிறோம். வாழ்க்கையின் ஆழ்ந்த போராட்டங்களிலும் நாம் அவரைப் பற்றிக்கொண்டு நிற்கிறோமா, அல்லது இந்த உலகத்தின் துயரத்திற்கு இடமளிக்கிறோமா?

Through this verse, we are reminded to wait on the Lord, no matter how impossible our situation may seem. We rely on our own understanding and seek temporary solutions instead of waiting on Him, who alone has the perfect and lasting answer. Are we holding on to Him in life's deepest struggles, or are we giving in to the sadness of this world?

-- Eighteenth Wednesday in Ordinary Time - Cycle 2


Tuesday, August 4, 2026

Aug 04

 மனதில் பதிக்க


“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர் ” -   மத்தேயு  15: 14

“If the blind lead the blind, both will fall into a pit” - Matthew 15: 14                                                            

 மனதில் சிந்திக்க


இயேசுவின் ஞானத்தையும் வழிநடத்துதலையும் சார்ந்து வாழாவிட்டால் , அவரில் வேரூன்றாதவர்களை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோம், அல்லது நம் சொந்தப் புரிதலை நம்பி மற்றவர்களைத் தவறான வழியில் நடத்துவோம் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். ஒவ்வொரு நாளும் இயேசு நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது உலகத்தின் குரல்களைப் பின்பற்றுகிறோமா?

Jesus reminds us that unless we are led by His wisdom, we will either blindly follow those not rooted in Him or mislead others by trusting our own understanding instead of God's truth. Are we allowing Jesus to lead us each day, or are we following the voices of the world?

-- Eighteenth Tuesday in Ordinary Time - Cycle 2


Monday, August 3, 2026

Aug 03

 மனதில் பதிக்க


“உண்மையாகவே நீர் இறைமகன்”  - மத்தேயு  14: 19

“Truly you are the Son of God"  - Matthew 14: 19                                                            

 மனதில் சிந்திக்க


இயேசு காற்றை அடக்கியதைக் கண்ட சீடர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை வணங்கினார்கள். அற்புதங்களைக் காணும்போது மட்டுமே விசுவாசம் கொள்ளும் சீடர்களைப் போலவே நாமும் பல நேரங்களில் இருக்கிறோம்.  நம்முடைய நம்பிக்கை வெறும் அற்புதங்களை மட்டுமே சார்ந்திருக்கிறதா, அல்லது துன்பங்களுக்கு மத்தியிலும் நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கிறோமா?

The disciples who witnessed Jesus calming the wind believed in Him and worshipped Him. We are often like the disciples, believing only when we witness miracles in our lives. Is our faith based only on miracles, or do we trust Him even in the midst of hardships?

-- Eighteenth Monday in Ordinary time - Cycle 2


Sunday, August 2, 2026

Aug 02

 மனதில் பதிக்க


“அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார்  ”  - மத்தேயு  14: 19

“Looking up to heaven, He gave thanks and broke the loaves. Then he gave them to the disciples" - Matthew 14: 19                                                                

 மனதில் சிந்திக்க


இந்த அற்புதத்தின் மூலம், பரலோகத் தந்தை நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். அவருடைய கச்சிதமான காலத்தையும், தவறாத திட்டத்தையும் முழுமையாக நம்பி, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். அவருடைய பராமரிப்பை நம்பி விசுவாசத்தில் முன்னேறிச் செல்கிறோமா, அல்லது சவால்களைக் கண்டு பயந்து பின்வாங்குகிறோமா?

Through this miracle, Jesus reminds us that our Heavenly Father provides for all our needs. We need to just remain steadfast in faith, trusting completely in His perfect timing and His unfailing plan. Are we moving forward in faith, trusting in His providence, or are we stepping back in fear because of the challenges we face?


-- Eighteenth Sunday in Ordinary time - Year A


Saturday, August 1, 2026

Aug 01

 மனதில் பதிக்க

இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.- எரேமியா - 26: 15

It was the LORD who sent me to prophesy against this house and city all that you have heard. - Jeremiah – 26:1                                                                      

 மனதில் சிந்திக்க


எரேமியாவின் துணிச்சல், இறைவனுக்கு உண்மையாக இருப்பது சில நேரங்களில் தனித்து நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதை நினைவூட்டுகிறது. சிறிய சமரசங்கள் நம் இறைநம்பிக்கையை மெaதுவாக பலவீனப்படுத்தும். இறைவனின் வார்த்தை நம்மைச் சுமையாக்க அல்ல, மாறாக அவரது விண்ணரசை பாதுகாப்பாக அடைய வழிநடத்தவே கொடுக்கப்பட்டுள்ளது. மனிதரின் பாராட்டை விட இறைவனின் அங்கீகாரத்தையே நாடி, உண்மையில் உறுதியாக நிலைத்திருப்போம்.

Jeremiah's courage reminds us that faithfulness often requires standing alone. Small compromises with sin can slowly weaken our commitment to God. His Word is given not to burden us but to guide us safely toward His kingdom. May we choose God's will over human approval and remain steadfast in the truth.


-- Seventeenth Friday in Ordinary Time - Cycle 2


Friday, July 31, 2026

Jul 31

 மனதில் பதிக்க

ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும். -  திருப்பாடல்கள் - 69: 14

Lord, in your great love, answer me. - Psalm 69:14

                                                                                  

 மனதில் சிந்திக்க


கடவுள் நம் பலவீனங்களை அறிந்திருந்தும், அவருடைய இரக்கத்தை நம்புமாறு நம்மை அழைக்கிறார். திருப்பாடல் ஆசிரியரைப் போலவே, உண்மையுடன் நிலைத்திருப்பதால் நாமும் நிராகரிக்கப்பட்டதாகவோ, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவோ அல்லது மனச்சோர்வடைந்ததாகவோ உணரக்கூடும். கிறிஸ்து நம் துன்பங்களில் பங்கெடுத்து, நம்மை நம்பிக்கையற்ற நிலையிலிருந்து மீட்டெடுக்கிறார். நிராகரிப்பை எதிர்கொள்ளும்போதும், நாம் அவரை ஆழமாக நம்பி உண்மையுடன் நிலைத்திருக்க முடியுமா?


God knows our weaknesses and still invites us to trust in His mercy. Like the psalmist, we may feel rejected, misunderstood, or overwhelmed for remaining faithful. Christ shares our suffering and lifts us from despair. Can we trust Him more deeply and remain faithful, even when we face rejection?


-- Seventeenth Friday in ordinary time - Cycle 2


Thursday, July 30, 2026

Jul 30

 மனதில் பதிக்க

நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். - மத்தேயு 13: 48


When it was full, they drew it ashore, sat down, and put the good into baskets but threw out the bad. - Matthew 13:48

                                                                                  

 மனதில் சிந்திக்க


இயேசுவின் வலை அனைவரையும் அரவணைத்து, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. அவருடைய அருள் இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால்அதனை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் வாழ வேண்டியது நம் பொறுப்பு. அவருடைய அன்பு நம் இதயங்களை மாற்றியமைக்கும்போது, நாம் புனிதத்தில் வளர்ந்து, பிறருக்கு இறையன்பின் கருவிகளாக மாறுகிறோம். இன்று நம் இதயத்தை இறைவனின் அருளுக்கு எவ்வாறு திறக்கிறோம்?

Jesus' net embraces everyone, revealing God's boundless mercy and love. His grace is freely offered, but we must choose to accept it and live faithfully. As His love transforms our hearts, we grow in holiness and become instruments of His love.

How are we opening our heart to God's grace today?


-- Seventeenth Thursday in Ordinary Time - Cycle 2


Wednesday, July 29, 2026

Jul 29

 மனதில் பதிக்க

எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய். எரேமியா -15: 18,19

Why is my pain continuous? Why is my pain unending? If you return, you shall stand before Me. Jeremiah – 15:18,19

                                                                                  

 மனதில் சிந்திக்க

கடவுளிடம் காட்டும் உண்மையுள்ள பற்றுறுதி பெரும்பாலும் தவறான புரிதல்களையும் புறக்கணிப்பையும் கொண்டுவரும் என்பதை எரேமியா நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்தவ வீரத்துவம் என்பது உணர்ச்சிகளே இல்லாமல் இருப்பது அல்ல; மாறாக, அனைத்தையும் அர்ப்பணிப்பதே ஆகும். அவமதிப்புகள் மனதை வருத்தும்போது ஆச்சரியப்படாதீர்கள்; அவற்றை கடவுளிடம் கையளியுங்கள். ஒரு விரைவான செயல்முறையைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்: ஒரு சிறிய ஜெபம், மீண்டும் பணியைத் தொடர்தல் மற்றும் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதே ஆகும்.

Jeremiah reminds us that faithfulness to God often brings misunderstanding and rejection. Christian heroism is not feeling nothing; it is offering everything. When insults hurt, do not be surprised—offer them to God. Practice the quick eviction: a short prayer, a return to the task, and the awareness of God's presence.

-- Seventeenth Wednesday in Ordinary Time - Cycle 2




Tuesday, July 28, 2026

Jul 28

 மனதில் பதிக்க

ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.- திருப்பாடல்கள்-79:9


For the glory of your name, O Lord, deliver us. - Psalm 79:9

                                                                                  

 மனதில் சிந்திக்க

நமக்கு ஒவ்வொரு நாளும் இறைவனின் இரக்கம் தேவை என்பதை திருப்பாடல்கள் நினைவூட்டுகிறது. நமது சொந்த முயற்சிகளால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது. புனித தெரேசாளைப் போல, எளிமையான குழந்தை மன நம்பிக்கையுடன் இறைவனை முழுமையாக நம்பி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க நாம் அழைக்கப்படுகிறோம்.ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தவும் உதவவும் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருக்கிறோமா?


Psalm reminds us that we need God's mercy every day. We cannot save ourselves by our own efforts. Like St. Thérèse, we are called to trust God with simple, childlike faith and bring everything to Him. Do we trust God to guide and help us each day?


-- Seventeenth Tuesday in Ordinary Time - Cycle 2