Sunday, October 20, 2024

Oct 20

                                                 மனதில் பதிக்க…


“நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.” (மாற்கு 10:39,40)


Jesus said to them, 'The cup that I shall drink you shall drink, and with the baptism with which I shall be baptized you shall be baptized, but as for seats at my right hand or my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted.' - Mark 10:39,40


மனதில் சிந்திக்க…


இவ்வுலகில் அனைத்து உயிருக்கும் கடவுளின் திட்டம் உண்டு. அதன் படியே இவ்வுலகில் அனைத்தும் நடக்கிறது. ஆனால் நாமோ பல நேரங்களில் கடவுளின் திட்டத்தை ஏற்க மனமில்லாமல் நமது விண்ணப்பம் நிறைவேறாத நேரங்களில் துவண்டு போகிறோம்..  கடவுளின் திட்டத்தை  செபத்தினால் அறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளும் மனதிற்காக இறைவனிடம் மன்றாடுவோமா


 God has a plan for every living thing in this world. And everything happens as per his plan. But many a times we are reluctant to accept God's plan and get disappointed when our petitions are not answered.

God reveals his plan through prayer, and it is very important for us to spend time with God daily. Are we ready to know God's plan and ask God to give a mind to accept his plan??


Saturday, October 19, 2024

Oct 19

                                                 மனதில் பதிக்க…


இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். -லூக்கா 12:8


I tell you, everyone who acknowledges me before others the Son of Man will acknowledge before the angels of God. - Luke 12:8


மனதில் சிந்திக்க…


புற இனத்தவரிடையே நாம் பழகும் சந்தர்ப்பங்களிலே எப்படி இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நம்மிடம் கேட்கும்போது "இயேசு ஆண்டவரின் இரக்கத்தினால் நான் நலமாக உள்ளேன் "என்று தைரியமாக சொல்கின்றோமா ? கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்கின்றோமா சிந்திப்போம் செயல்படுவோம்.

 

When any non-Catholic / non-Christian inquiries about our well-being, do we respond with courage and joy, “I am fine and doing good with Divine mercy and His blessings”? Can we be a witness to his love though our daily life especially with our gentle approach?  Think about it?


Friday, October 18, 2024

Oct 18

                                                    மனதில் பதிக்க…


புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன் .நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். - லூக்கா 10:3,5 


Go on your way; behold, I am sending you like lambs among wolves. Into whatever house you enter, first say, ‘Peace to this household.’- Luke 10:3,5


மனதில் சிந்திக்க…


கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை மறைபரப்புப் பணிசெய்வது  ஆகும்.நம் இல்லத்தில் இப்பணியை, வேத நூலை வாசித்து, புரிந்து, நம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதன் மூலமாக நிறை நிறைவேற்றலாம். மறைபரப்புப் பணியிலே துன்பங்களும் எதிர்ப்புகளும் வரும் போது அமைதியான மனநிலையோடு தொடர்ந்து அவரது ஊழியத்தை உறுதியுடன் எடுத்துச் செல்கின்றோமா என்று சிந்தித்து செயல்படுவோம். 


As Catholics, we are given a mission to spread the good news of God. At home, we can achieve this mission by reading and understanding the Bible and teaching it our children. Whenever challenges are faced, let us be calm and persevere in doing the missionary work.


Thursday, October 17, 2024

Oct 17

                                 மனதில் பதிக்க…


நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். எபேசியர் 1:4


Even as he chose us in him before the foundation of the world, that we should be holy and blameless before him in love Ephesians 1: 4


மனதில் சிந்திக்க…


மேற்கண்ட இறைவசனம் நாம் இறைவன் முன்னிலேயிலே எவ்வளவு தூயவராக இருக்க வேண்டும் என்பதை கற்றுத்தருகிறது. கிறிஸ்து வழியாக மாத்திரமே நாம் முழுமையான தூய்மை பெற முடியும் என்பது உறுதியாகிறது. எனவே நமது அனுதின பயணமும் கிறிஸ்துவின் வழியில் தான் இருக்கிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


The above verse teaches us how pure we should be before God. It is certain that we can get complete purity only through Christ. Therefore, let us think and act if our daily journey is in the way of Christ.


Wednesday, October 16, 2024

Oct 16

                                                    மனதில் பதிக்க…


"ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும் ". லூக்கா 11:42


Woe to you Pharisees! You pay tithes of mint and of rue and of every garden herb, but you pay no attention to judgment and to love for God. These you should have done, without overlooking the others. Luke 11: 42


மனதில் சிந்திக்க…


நமது வாழ்க்கையில் எவற்றுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு ஆண்டவர் கற்பிக்கிறார்.எனவே எல்லாவற்றையும் விட இறைவனின் கட்டளைகளை கடைப்பிடிபதில் பொறுப்புடன் இருக்கின்றோமா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


Jesus teaches us, what should be given more importance in our lives. Therefore, above everything else, let's think and act if we are responsible in keeping the Lord's commandments.


Tuesday, October 15, 2024

Oct 15

                                                     மனதில் பதிக்க…


அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். லூக்கா 11: 40-41.


You foolish people! Did not the one who made the outside make the inside also? But now as for what is inside you—be generous to the poor, and everything will be clean for you. Lk 11: 40-41


மனதில் சிந்திக்க…


மற்றவர்கள் முன் என்னை ஒரு திறமைசாலியாக மிகவும் நல்லவராக அல்லது அழகானவராக காட்டிக்கொண்டு நமது சிந்தனைகளும் வார்த்தைகளும் செயலும் தீயதாய் அடுத்திருப்பவரை காயப்படுத்துவதாய் இருந்தால் என்ன பயன் ?எனவே நம்முள்ளிருந்து வருகின்ற வார்த்தைகள் நடத்தைகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.


What does one gain, when one has selfishness and boasting about his talent, has evil mind with evil thoughts and hurting others? Rather our talent and our comforting words should bring joy and peace. Think about it.


Monday, October 14, 2024

Oct 14

                                                 மனதில் பதிக்க…


யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். லூக்கா 11:30


Just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. - Luke 11:30 


மனதில் சிந்திக்க…


தொடக்க காலத்திலிருந்தே கடவுள் மனிதர்களை வழிநடத்தி வருகிறார் எனினும் மக்கள் பாவத்திலேயே வீழ்ந்து போகின்றனர். நமது மேல் மகா இரக்கமும் கிருபையும் கொண்ட கடவுள் தம் ஓரே பேரான மகனையே மீட்பின் அடையாளமாக கொடுத்தார். அந்த நன்றியை நமது உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்தவர்களாக நாம் செய்கின்ற எல்லா சொல்லும் செயலும் சிந்தனையும் இறைவனுக்கு மகிமையை தருகிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம். 


God has been guiding us from the beginning. Still, we sway away from God and keep falling into sins. Inspite of that, our generous and loving God gave His only son to redeem us. Shall we realize the greatness of God and our actions glorify Him? Think about it. 


Sunday, October 13, 2024

Oct 13

                                                 மனதில் பதிக்க…


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.     எபிரேயர்4:12

Indeed, the word of God is living and effective, sharper than any two-edged sword, penetrating even between soul and spirit, joints and marrow, and able to discern reflections and thoughts of the heart. - Hebrews 4:12


மனதில் சிந்திக்க…


திரு விவிலியத்தில் உள்ள கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உயிர் பெறுகிறது என்றால் நாம் அந்த வார்த்தைகளை முழுமையாக நம்பி ஏற்று அதன்படி வாழும்போது அவ்வார்த்தை உண்மையிலேயே கிருபை செய்கிறது கூர்மையடைகிறது நமது சிந்தனைகளை சீராக வைக்க உதவுகிறது கடவுளின் பார்வையில் நமது சிந்தனைகள் எப்போதும் இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போமா சிந்திப்போம் செயல்படுவோம் 


The Word of God becomes true if we believe and follow it. Word of God gives Grace and sharpen our thoughts. Shall we always remember that God knows all of inner thoughts and act accordingly? Think about it.


Saturday, October 12, 2024

Oct 12

                                                     மனதில் பதிக்க…


இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். - லூக் 11: 28


Blessed are those who hear the word of God and keep it! Lk 11: 28



மனதில் சிந்திக்க…


நாம் இறைவனின் பிரசன்னத்தில், அவர் நம்மீது கொண்டுள்ள மிகுந்த அன்பை அவருடைய வார்த்தைகளின் மூலம் அறிந்து வாழ முயற்சிப்போம்.


Let us try to live in the presence of our Lord, in the knowledge of His great love for us through His words.


Friday, October 11, 2024

Oct 11

                                         மனதில் பதிக்க…


என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். லூக் 11: 23


He who is not with me is against me, and he who does not gather with me scatters all. Lk 11:23



மனதில் சிந்திக்க…


நாம் அவருக்கு ஆதரவாக அல்லது எதிராக மட்டுமே இருக்கமுடியும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இரண்டு எதிரெதிர் அரசர்களுக்கு நாம் சேவை செய்ய முடியாது. கடவுளின் அரசு, ஒளி மற்றும் சத்தியம் கொண்டது. இருளின் அரசு அவருடைய சத்தியத்தையும் நீதியையும் எதிர்க்கிறது. நாம் எந்த பக்கம் சேர்ந்தவர்கள்? சிந்திபோம் செயல் படுவோம்.


Jesus makes it clear that we are either for Him or against Him. We cannot serve two opposing kingdoms. God's kingdom is the one with light and truth, while the kingdom of darkness opposes His truth and justice. Which side do we belong to? Let us think about it and act.